As I See It

Here I pen my views on the Topics interested to me, on Topics that kindle my thoughts, the things I want to tell and share with some one and when I find no one...missing you friends !!!

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

You know me

Saturday, September 30, 2006

பாடல்களின் சிறப்பம்சம்

பல பாடல்களுக்குப் பின் சிறு சிறு சிறப்பம்சங்கள் இருக்கும். அவ்வாறு எனக்கு தெறிந்த சில சிறப்பம்சங்கள். அனைவருக்கும் தெறிந்த செய்தியாக இருத்தாலும் எனது Blogயிலும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணதில் இங்கு எழுதுகிறேன்.

1) ஆயிரம் நிலவே வா - SPBயின் முதல் தமிழ் திரைப்பாடல் என்று கருதப்பட்டாலும், SPB முதலில் பாடியது 'இயற்கை எனும் இளைய கன்னி' சாந்தி நிலையம் படத்திற்காக.
2) வாராயோ தோழி வாராயோ - பல கிலு கிலுப்பும் சுறு சுறுப்பும் நிறைந்த பாடல்களை பாடிய LR.ஈஸ்வரி பாடிய முதல் பாடல்.
3) பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி- திறையில் KR விஜயாவின் திருமணப்பாடல், கவிஞர் கண்ணதாசன் தனது மகளின் திருமணத்திற்க்காக இயற்றிய பாடல் என்று கூறப்படுகிறது.
4) ஏன் பிறந்தாய் மகனே -TMS தனது மகனை இழந்திருந்த போது உருவாகிய பாடல் இது.
5) அம்மா என்றழைக்காத உயிரில்லையே - இயக்குனர் P. வாசு தனது தாயை இழந்திருந்த போது உருவாகிய பாடல் இது.
6) ப்ரியா -Stereoவில் பதிவு செய்யப்பட்டமுதல் தமிழ் திரையிசை.
7) என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் - பாடலின் ராகம் Dum mare Dum என்ற ஹிந்தி பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.
8) அதிக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே - காய்களின் பெயர்களைக் கொண்டு அமைந்த பாடல், ஆனால் பாடலின் பொருள் காய்கறிகளை குறிக்காமல் நல்ல காதல் வரிகளாக அமைந்திருக்கும்.
9) வசந்த கால நதிகளிலே - ஒரு வரி முடியும் வார்த்தையில் இருந்து அடுத்த வரி துவங்கும். வசந்த கால.....நீரலைகள், நீரலைகள் மீதினிலே...... நினைவலைகள், நினைவலைகள் தொடருவதால்....
10) ஆடி வெள்ளித் தேடி உன்னை நான் அடைந்த நேரம் - இதிலும் பல்லவி முடியும் வார்த்தையில் சரணம் துவங்கும். முதல் சரணம் முடியும் வார்தையில் இரண்டாம் சரணம் தொடங்கும்.
11) வெகு நாட்களாக பாடளுக்கு சந்தம் தராத இசையமைப்பாளரிடம் மீண்டும் மீண்டும் சந்தம் கேட்டதால் சலித்துக்கொண்டு, "தாநநநாந தாநநநாந தாநநநாந இது தான் சந்தம்" என்று கூறி அனுப்பி விட்டார். இந்த குறைந்த சந்த நடைக்கு "காகித ஓடம் கடல் அலை மீது போவதைப்போலே" என்ற பாடலை கலைஞர் கருனாநிதி தந்தார். முழுப்பாடலும் இந்த சந்த நடைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
12) இது போலவே தான் 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி" பாடலும். பலர் இந்த பாடலை மேடையில் பாட கேட்டு இருபீர்கள்.
13) ஞாயிறு ஒலி மழையில் - கமல் பாடிய முதல் பாடல்
14) பொன் மானே தேடுதே - ஓ மானே மானே திறைப்படதில் மோகனுக்காக கமல் பாடிய பாடல். சமிபதில் தனூஷ் படம் புதுப்பேட்டையில் 'நெறுப்பு வாயினில்' கமல் பாடியது.
15) புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி..பாடல், 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்' என்ற பாடலின் சந்ததின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. "நான் பார்த்ததிலே.. ரப்பப்பரி.. அவள் ஒருதியை தான்.. ரப்பப்பரி..."
16) CD யில் பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்பாடல், ராக்கம்மா கையதட்டு, ஒளிப்பதிவு Londonயில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
17) Computer இசை முதலில் பயன் படுதிய திரைப்படம் 'புன்னகை மன்னன்'.
18) சின்னக்குயில் சித்ரா என்று பிரபலம் ஆன சித்ரா பாடிய முதல் பாடல் 'பூஜைக்கேத்த பூவிது' கங்கை அமரனுடன் சேர்ந்து. (correction made as per comment)
19) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு தோகை மயில் என் துனையிருப்பு.. தனது வாழ்க்கையை சித்தரிப்பது போல் அமைந்த பாடலுக்கு தானே நடித்தார் கவிஞர் கண்ணதாசன்.
11) கவிதை அறங்கேறும் நேரம் - 'அந்த 7 நாட்கள்' பாடல், ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் பாடலின் சந்தத்தில் அமைந்தது. 'ஓடி விளையாடு பாப்பா' பாடல் முழுவதும் இந்த பாடலின் ராகத்தில் பாடலாம்.
12) ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - Percusion instruments மட்டுமே வைத்து இசையமைத்த பாடல் இது. string instruments மற்றும் wind instruments இந்த பாடலில் கிடையாது.

உதவிகள் வரவேற்க்கப்படுகின்றன asivakumar6@yahoo.com அல்லது commentsயில் எழுதவும்.

1 Comments:

Anonymous Anonymous said...

சித்ராவின் முதல் பாடல் வேரு. "பூஜைக்கு ஏத்த பூவிது"!

11:55 AM  

Post a Comment

<< Home